நாடோடிகள்-2 திரைப்படத்திற்கான இடைக்கால தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது! நள்ளிரவு முதல் படம் வெளியாகும்

 

நாடோடிகள்-2 திரைப்படத்திற்கான இடைக்கால தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது! நள்ளிரவு முதல் படம் வெளியாகும்

நடிகர் சசிகுமார், அஞ்சலி நடித்து சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள்-2 திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமையை ஐந்து கோடியே 25 லட்சத்துக்கு கொடுப்பதாக எப்.எம். பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

நடிகர் சசிகுமார், அஞ்சலி நடித்து சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள்-2 திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமையை ஐந்து கோடியே 25 லட்சத்துக்கு கொடுப்பதாக எப்.எம். பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

movie

பின்னர் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் வரையில் பணம் திருப்பி கொடுக்கப்பட்டிருப்பதாகவும், படத்தின் உரிமையை வேறு சிலருக்கு விற்க முயற்சி நடப்பதாகவும் கூறி, எப்.எம். பைனான்ஸ் நிறுவனம் நாடோடிகள்-2 படத்திற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி நீதிமன்றம் சென்றது. 

தயாரிப்பாளர் தரப்பில் நிலுவை தொகையில் பாதியை தருவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில், இப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. நள்ளிரவு முதல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது