“நாடோடிகள்” திரைப்பட நடிகர் கே.கே.பி. கோபாலகிருஷ்ணன் காலமானார்!

 

“நாடோடிகள்” திரைப்பட நடிகர் கே.கே.பி. கோபாலகிருஷ்ணன் காலமானார்!

அரசு வேலைதான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.

நாடோடிகள் படத்தில் நடித்த நடிகர் கேகே பி கோபாலகிருஷணன் காலமானார்.

தமிழில் கடந்த  2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நாடோடிகள்’. நண்பனின் காதலுக்காக உயிரையே பணயம் வைக்கும் நண்பர்கள்,  காதல், தோல்வி, ஏமாற்றம்,  வலி என உணர்வுப் பூர்வமான கதையை இயக்கி வெற்றி கண்டார் இயக்குநர் சமுத்திரக்கனி.

ttn

இந்த படத்தில் அனன்யாவின் தந்தையாக நடித்தவர் கேகே பி கோபாலகிருஷணன். அரசு வேலைதான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.

ttn

இந்நிலையில் நாடோடிகள் புகழ்  கேகே பி கோபாலகிருஷணன் ஈரோடு – வெள்ளோடு செல்லும் வழியில் குப்பகவுண்டன் பாளையம் இல்லத்தில்  இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.