நாடு முழுவதும் ஒரே நாளில் சம்பளம்! மோடியின் புது ப்ளான்!

 

நாடு முழுவதும் ஒரே நாளில் சம்பளம்! மோடியின் புது ப்ளான்!

இந்தியா முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே மொழி என்கிற கொள்கையை தீவிரமாக ஒவ்வொரு மாநிலமாக செயல்படுத்தி வரும் மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது ஒரு தேசம், ஒரு ஊதிய நாள் என்ற முறையை கொண்டு வர தயாராகி வருவதாக மத்திய தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார். 

Santhosh Gangwar

இது பற்றி பேசிய மத்திய தொழிலாளர் அமைச்சர், நாட்டின் அனைத்து ஊழியர்களும் ஒரே நாளில் சம்பளம் பெற வேண்டும் என்பது மத்திய அரசின் முயற்சி. பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய  விரைவில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார் எனக் கூறினார்.