நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? பொன்.ராதாகிருஷ்ணன் கணிப்பு

 

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? பொன்.ராதாகிருஷ்ணன் கணிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நாகர்கோவில்: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷணன் நாகர்கோவில் மாவட்டம் கனகபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறுவது உறுதி. தற்போது உள்ள காலம் கூட்டணி காலம். அ.தி.மு.க. தொடங்கிய காலம் முதல் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்ததே இல்லை. இதேபோல் தி.மு.க.வும் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்தித்து வருகிறது.

தமிழகத்தில் கூட்டணிக்கு பழக்கப்பட்டுள்ளனர். வேறு மாநிலங்களில் இந்த நிலை இல்லை. கழகங்கள் இல்லாத தமிழகத்தை நாம் கண்டாக வேண்டும். அது வந்தால் தான் தமிழகத்தில் உச்சக்கட்ட வளர்ச்சியை காண முடியும். ஒவ்வொரு தமிழனும் இதை உணர வேண்டும் என்றார்.