நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும் : ஓ.பி. எஸ்

 

நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும் : ஓ.பி. எஸ்

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ‘யார் எந்த கட்சி தொடங்கினாலும் அது அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. அரசு முறை பயணமாகத் தான் அமெரிக்கா சென்றேன். அங்கு உலக முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசினோம். அவர்களும் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். உலக வங்கியிடம் சென்று பேசினோம். அமெரிக்கா பயணம் முழு வெற்றி பயணமாகியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். 

OPS

அதனைத் தொடர்ந்து, ‘மேலவளவு கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் குறித்து உயர்நீதி மன்ற நீதிபதிகள் அவர்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே போல, அரசியல் தலைவர்களும் அவர்களது கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். வரும் உள்ளாட்சித் தேர்தலில் நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும். அதிமுக வலுவான கட்சி என்பதால் எங்களுடன் கூட்டணி அமைக்கப் பல கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. யார் தகுதியானவர்களோ, அவர்களைத் தேர்வு செய்து தேர்தலில் நிறுத்துவோம்’ என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.