நாங்குநேரி, விக்கிரவாண்டியிலுள்ள பள்ளிகளுக்கு வரும் 21 ஆம் தேதி விடுமுறை! 

 

நாங்குநேரி, விக்கிரவாண்டியிலுள்ள பள்ளிகளுக்கு வரும் 21 ஆம் தேதி விடுமுறை! 

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்.21 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்.21 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் களத்தில் உள்ளனர். இதேபோல், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜ நாராயணன் உட்பட 23 பேர் களத்தில் உள்ளனர்.

Election

இதையடுத்து இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்.21 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அக்.21 அரசு, தனியார் அலுவலக பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.