நாங்குநேரி சுங்கச்சாவடியில் பயணிகள், ஊழியர்கள் மோதல் – 10 பேர் காயம்

 

நாங்குநேரி சுங்கச்சாவடியில் பயணிகள், ஊழியர்கள் மோதல் – 10 பேர் காயம்

நாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த தாமதமானதால் பயணிகள், ஊழியர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.

நெல்லை: நாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த தாமதமானதால் பயணிகள், ஊழியர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.

சுங்கச்சவடிகளில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் இடையே வாக்குவாதம் நடப்பதும், கைகலப்பு ஆவதும் தொடர்கதை ஆகி வருகிறது. பெரும்பாலும் கட்டணம் அல்லது சில்லறை தொடர்பான பிரச்சனைகளே எழுகின்றன. சமயங்களில் வாக்குவாதம் முற்றி ஓட்டுனர்களும், சுங்கச்சாவடி ஊழியர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் சுங்கச்சவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இந்நிலையில், நாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த தாமதமானதால் காரில் வந்த கேரள பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.