நாங்குநேரியில் வாக்கு எண்ணிக்கைகள் தாமதம்..!

 

நாங்குநேரியில் வாக்கு எண்ணிக்கைகள் தாமதம்..!

இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக வெ.நாராயணனும்  காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரனும் போட்டியிட்டனர். இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது. வாக்கு எண்ணிக்கை துவங்கிய உடனேயே நாங்குநேரி தொகுதி வாக்கு எண்ணிக்கைகளைக் கணினியில் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை அரை மணி நேரம் தாமதமாகி  8:30 மணிக்குத் தொடங்கியது. 

Nanguneri

தற்போது, விக்கிரவாண்டியில் 4 சுற்றுகளின் முடிவுகள் வெளியான நிலையில் நாங்குநேரியில் 1 சுற்றின் முடிவுகள் மட்டுமே வெளியாகியுள்ளன. கணினியில் பதிவேற்றம் செய்வதில் ஏற்பட்ட சிக்கல் தொடர்கிறது. அதனால், நாங்குநேரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கைகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.