நாங்குநேரியில் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி சோதனை..!

 

நாங்குநேரியில் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி சோதனை..!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை, அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக திமுக வழக்கறிஞர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனால், நாங்குநேரியில் பறக்கும் படையினர் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர். 

Money

அந்த சோதனையில், வாக்காளர்களுக்குக் கொடுக்கவிருந்த ரூ.1.78 லட்சத்தைப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையின் போது அந்த பணம் அதிமுக பிரமுகரின் பணம் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு அதிமுக பிரமுகர் வாக்குவாதம் செய்ததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.78 லட்சத்தை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப் பறக்கும் படை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.