நாங்குநேரியில் நாறும் அதிமுக மானம்… ஆபாச அர்ச்சனையால் அதிர்ச்சி..!

 

நாங்குநேரியில் நாறும் அதிமுக மானம்… ஆபாச அர்ச்சனையால் அதிர்ச்சி..!

இப்படியே மாவட்ட முக்கிய புள்ளி திட்டிக் கொண்டே இருந்தால், கடைசியில் கட்சிக்காரங்க யாரும் இருக்க மாட்டாங்க. உள்ளாட்சி தேர்தலிலும் நமக்கு நாமம் தான் கிடைக்கும் .

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமையில் குமரி மாவட்ட அதிமுகவினர் முகாமிட்டு இருக்கிறார். 

அப்படி தேர்தல் பிரசாரத்துக்கு போன நிர்வாகிகள் சிலரை, குமரி மாவட்ட அதிமுக முக்கிய புள்ளி கடுமையாக ஆபாசமாக திட்டியதால், பிரசாரத்துக்காக போனவர்கள் மீண்டும் திரும்பி ஊருக்கே வந்து விட்டார்கள். சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பேரூராட்சி அதிமுக செயலாளராக உள்ள வீரபத்ர பிள்ளை என்பவரை, முக்கிய புள்ளி ஆபாசமாக திட்டி இருக்கிறார். 

இதை கேட்டு, வீரபத்திர பிள்ளை மயங்கி விழுந்து விட்டார். அவரை சக கட்சிக்காரர்கள் மீட்டு ஏர்வாடி மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். மயங்கி விழுந்த வீரபத்ர பிள்ளை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்தின் தீவிர விசுவாசி. மாவட்ட முக்கிய புள்ளி திட்டியது குறித்து, அவர் தளவாய்சுந்தரத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல, ’’நான் என்னப்பா செய்ய?’’ என்று அவரும் எதுவும் பேசாமல் மவுனமாகி விட்டாராம்.

 இப்படியே மாவட்ட முக்கிய புள்ளி திட்டிக் கொண்டே இருந்தால், கடைசியில் கட்சிக்காரங்க யாரும் இருக்க மாட்டாங்க. உள்ளாட்சி தேர்தலிலும் நமக்கு நாமம் தான் கிடைக்கும் பாருங்க என்று தளவாய்சுந்தரத்திடம் அவரது ஆதரவாளர்கள் புலம்பி வருகிறார்கள்.