நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட யாரும் வரவில்லை!!

 

நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட யாரும் வரவில்லை!!

உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப் பட்ட நாங்குநேரியின் வட்டாட்சியர் அலுவலகத்தில் 200 விருப்ப மனுக்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன் படி, நாங்குநேரியில் காங்கிரஸும் விக்கிரவாண்டியில் தி.மு.க வும் போட்டியிடப் போவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 

Election

அதன் படி, இன்று முதல் விருப்ப மனுவை காலை 10 முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப் பட்ட நாங்குநேரியின் வட்டாட்சியர் அலுவலகத்தில் 200 விருப்ப மனுக்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய முதல் நாளான இன்று, அ.தி.மு.க சார்பில் மனோஜ் பாண்டியராஜன் என்ற ஒருவர்  மட்டும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் காங்கிரஸ் சார்பாக நாங்குநேரியில் போட்டியிட  யாரும் வர வில்லை என்றும் தகவல்கள் வெளியாகின்றன.