நாங்குநேரியிலும் வெற்றி வாகையைச் சூடியது அதிமுக..!

 

நாங்குநேரியிலும் வெற்றி வாகையைச் சூடியது அதிமுக..!

அதிமுக வேட்பாளர் வெ. நாராயணன் 32,333 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது. வாக்கு எண்ணிக்கைகளைக் கணினியில் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கைகள் சற்று தாமதமாகவே தொடங்கின. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரனும், அதிமுக சார்பாக நாராயணனும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கைகளின் முடிவில், அதிமுக 94562 வாக்குகளும், காங்கிரஸ் 62,229 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 2,662 வாக்குகளும் பெற்றுள்ளது. 

Nanguneri

அதன் படி, அதிமுக வேட்பாளர் வெ. நாராயணன் 32,333 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் அதிமுக தொண்டர்களும் அக்கட்சித் தலைவர்களும் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கின்றனர்.