நாங்கள் நரேந்திர மோடி போல தீவிரவாதிகளுக்கு சலாம் போடமாட்டோம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 

நாங்கள் நரேந்திர மோடி போல தீவிரவாதிகளுக்கு சலாம் போடமாட்டோம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஹவேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசாரை விடுதலை செய்து பாகிஸ்தான் அனுப்பியது பாஜக அரசு என குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகா: ஹவேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசாரை விடுதலை செய்து பாகிஸ்தான் அனுப்பியது பாஜக அரசு என குற்றம் சாட்டியுள்ளார்.

ஹவேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத் தலைவன் மசூத் அசாரை விடுதலை செய்தது பாஜக அரசாங்கம். 1999-ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தில், மசூத் அசார் மற்றும் அவனது தோழர்களை விடுதலை செய்தது பாஜக அரசாங்கம். இப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்படும் அஜித் டோவல்தான் அன்று மசூத் அசாரை விடுதலை செய்து பாகிஸ்தான் செல்ல அனுமதித்தவர் என்றார். இதுகுறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்குமாறு மோடியை வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் அவர், நாங்கள் பிரதமர் நரேந்திர மோடி போல தீவிரவாதிகளுக்கு சலாம் போடமாட்டோம் என தெரிவித்துள்ளார்.