நாங்கள் அடைந்த பாதிப்பை திமுகவும் அடையும்; வைகோவை வறுத்தெடுத்த சுதீஷ்

 

நாங்கள் அடைந்த பாதிப்பை திமுகவும் அடையும்; வைகோவை வறுத்தெடுத்த சுதீஷ்

இந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விமர்சித்துள்ளார்.

இந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விமர்சித்துள்ளார்.

இந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த சுதீஷிடம் மக்கள் நலக் கூட்டணி தோல்வியை சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர், மக்கள் நலக் கூட்டணி தோல்வி பெற வைகோ போன்றவர்களின் செயல்தான் காரணம். வைகோவின் தவறான அறிக்கைகள், கோவில்பட்டியில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றது போன்ற நடவடிக்கைகள்தான் தோல்விக்கு காரணம். இதேபோன்று அவர் திமுக கூட்டணியிலும் செய்வார், திமுகவை தோல்வியடைய செய்தபிறகே அவர் வெளியே வருவார். நாங்கள் அடைந்த பாதிப்பை திமுகவும் அடையும் என்றார்.

மேலும், தேமுதிக உடன் கூட்டணி அமைத்தது பற்றி வருத்தம் தெரிவித்த ஜெயலலிதா கட்சியில் மீண்டும் கூட்டணி அமைப்பது பற்றி சுதீஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அப்படியெல்லாம் பார்த்தால் திமுகவை கடுமையாக விமர்சித்த வைகோ மீண்டும் திமுக உடன் கூட்டணி அமைக்கவில்லையா என்றார்.