நாங்கள் அச்சுறுத்தல்களை சகித்துக்கொள்ள மாட்டோம்: பாக். அமித் ஷா எச்சரிக்கை!
இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அதைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் : இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அதைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாதியாயா பெட்ரோலிய பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமித் ஷா, ‘ஊரி முகாம் தாக்குதலுக்குப் பின்னர் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் பல தீவிரவாத அமைப்புகள் தவிடு பொடியாகி விட்டன. மோடி தலைமையிலான அரசு அமைதியை விரும்பும் அரசு தான் என்றாலும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அதைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘எல்லைகளை மீற பாகிஸ்தானை அனுமதிக்க முடியாது. எல்லைத் தாண்டிய தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.