நாங்களாம் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிங்கப்பா! சொன்னா நம்புங்க…. கதறும் தமிழிசை

 

நாங்களாம் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிங்கப்பா! சொன்னா நம்புங்க…. கதறும் தமிழிசை

கமல்ஹாசனுடைய பேச்சு அவரின் கட்சியினருக்கு புரியவில்லை. ஆனால் எங்களுக்கு புரியும் ஏனெனில் நாங்கள் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசனுடைய பேச்சு அவரின் கட்சியினருக்கு புரியவில்லை. ஆனால் எங்களுக்கு புரியும் ஏனெனில் நாங்கள் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு ஒட்டப்பிடாரம் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்கிறேன். தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது நாகரீகமாக அமைதியாக ஒரு வரம்புக்கு உட்பட்டு தான் பேசுகிறோம். கமலஹாசன்  செய்வது போல வரம்பை மீறி, பிரிவினைவாதி போல நாங்கள் பேச மாட்டோம் . அதுதான் அனுபவம். மக்கள் மனம் புண்படும் என தெரிந்தும் கமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துகளை தெரிவிக்கிறார். ஓட்டு அரசியலுக்காக வேண்டுமென்றே இவ்வாறு கமல்ஹாசன் பேசுகிறார்.

Image result for kamal haasan with tamilisai

நேர்மையான  அரசியல் செய்வது எங்கள் கூட்டணி மட்டும்தான். நாங்கள்தான் மக்களுக்கான நல்ல திட்டங்களை செய்து கொடுக்கிறோம். 2 இடைத்தேர்தல்களிலும் அதிமுக- பாஜக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.  முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை கமலஹாசன் சொல்லியிருக்கிறார்அவர் பேசியது அவருடைய கட்சியினருக்கே புரியவில்லை ஆனால் எங்களுக்கு புரியும்,  ஏனெனில் நாங்கள் அனுபவ வாய்ந்த அரசியல் வாதிகள்” எனக்கூறினார்.