நவம்பர் 10 ஆம் தேதி திமுக பொதுக் குழுக் கூட்டம்..!
இன்று திமுக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் திமுகவின் பொதுக் குழுக் கூட்டம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மு.க ஸ்டாலின் திமுகவின் தலைவராகப் பதவியேற்ற பிறகு, அவரின் தலைமையில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இடைத்தேர்தலால் அந்த பொதுக் குழுக் கூட்டம் தேதி அறிவிப்பின்றி ஒத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று திமுக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் திமுகவின் பொதுக் குழுக் கூட்டம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் 10-11-2019 அன்று சென்னை – ராயப்பேட்டை திடலில் நடைபெறும்”
– திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் அறிவிப்பு.#DMK #MKStalin pic.twitter.com/7E5GJ4mv8o
— DMK (@arivalayam) October 31, 2019
அதில், மு.க ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 6 நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்ட திமுக பொதுக் குழுக் கூட்டம், வரும் 10 ஆம் தேதி அன்று காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார். அக்கூட்டத்தில் பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பொதுக் குழுக் கூட்டத்தில் கழக ஆக்கப்பணிகள், உள்ளாட்சித் தேர்தல், கழக சட்டதிட்ட திருத்தம் மற்றும் தணிக்கை குழு அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படப் போவதாகவும் க.அன்பழகன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.