நள்ளிரவில் குடும்பத்துடன் கோவிலில் தரிசனம் செய்த அருண் விஜய்! எதுக்குனு தெரியுமா?

 

நள்ளிரவில் குடும்பத்துடன் கோவிலில் தரிசனம் செய்த அருண் விஜய்! எதுக்குனு தெரியுமா?

நடிகர் அருண் விஜய் நள்ளிரவில் குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவில் சென்று தரிசனம் செய்துள்ளார். 

சென்னை: நடிகர் அருண் விஜய் நள்ளிரவில் குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவில் சென்று தரிசனம் செய்துள்ளார். 

நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தடம். குற்றம் – திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். கதாநாயகியாகத் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.

arun vijay

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் கடந்து வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு வருகிறது. அதை கொண்டாடும் விதமாக நடிகர் அருண் விஜய் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலில் சென்று தரிசனம் செய்துள்ளார்.

அப்போது  எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அதில்,’தடம் திரைப்படம் 50 நாள் வெற்றிகரமாகக் கடந்ததையடுத்து, குடும்பத்துடன் திருவண்ணாமலை, கிரிவலம் சென்றேன். ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தேன்’ என்று அதில் கூறியுள்ளார். தடம் வெற்றிக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: நடிகர் விஜய் ரசிகர்களின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்த காமெடி நடிகர் கருணாகரன்…