நள்ளிரவில் காணாமல் போன நர்ஸ் ட்ரைனிங் படிக்கும் டீனேஜ் மாணவிகள் -பெண்கள் விடுதியில் பாதுகாப்பில்லை என புகார் 

 

நள்ளிரவில் காணாமல் போன நர்ஸ் ட்ரைனிங் படிக்கும் டீனேஜ் மாணவிகள் -பெண்கள் விடுதியில் பாதுகாப்பில்லை என புகார் 

ஹைதராபாத் வரவர பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாக மாறிவருகிறது.சமீபத்தில் ஒரு கால்நடை மருத்துவரை சில நபர்கள் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்தது .அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில் நேற்று சில சிறுமிகள் காணாமல் போனதால் பெற்றோர்  கவலையுற்றனர்  

ஹைதராபாத் வரவர பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாக மாறிவருகிறது.சமீபத்தில் ஒரு கால்நடை மருத்துவரை சில நபர்கள் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்தது .அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில் நேற்று சில சிறுமிகள் காணாமல் போனதால் பெற்றோர்  கவலையுற்றனர்  

ஹைதராபாத்தில் 18 வயது மற்றும் 19 வயதுடைய இரண்டு மாணவிகள் , மாரெட்பள்ளியில் அமைந்துள்ள தங்கள் விடுதியில் இருந்து காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை நடந்தது.

girls

வழக்கில் கிடைத்த  விவரங்களின்படி, அம்மாணவிகள்  ஒரு கார்ப்பரேட்  மருத்துவமனையுடன் இணைந்த ஒரு நர்ஸ் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தனர் .தினமும் ஹாஸ்டலிலிருந்து ஹாஸ்பிடலுக்கு போய் வந்துள்ளனர் .தினமும் சரியான நேரத்துக்கு வரும் அவர்கள் சம்பவம் நடந்தன்று வரவில்லை .

வியாழக்கிழமை, இருவரும் வகுப்புகளில் கலந்து கொள்ள ஹாஸ்டலில் இருந்து போனபிறகு மீண்டும் ஹாஸ்டலுக்கு திரும்பவில்லை .அப்பெண்களை  பற்றி கவலைப்பட்ட ஹாஸ்டலின் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தது.இப்படி அடிக்கடி பெண்களுக்கு பிரச்சசினையுள்ள நகரமாக ஹைதராபாத் மாறிவருவதால் பெற்றோர்கள் தங்கள் பெண்களை ஹாஸ்டலில் குறிப்பாக ஹைதராபாத்தில்  தங்க வைக்கவே அஞ்சுகின்றனர் .
காணாமல் போன மாணவிகள் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர் .