நளினமாக நடனம் ஆடி பிரபு தேவாவுக்கு டஃப் கொடுக்கும் டிக் டாக் இளைஞர்!
Jan 27, 2020, 14:30 IST1580115610000
தமிழ் மொழியை போற்றும் வகையில் அமைந்துள்ள இந்த பாடலானது பள்ளி விழாக்கள், அரசு விழாக்களில் பாடப்பட்டு வருகிறது.
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பலராலும் அறியப்பட்ட ஒன்று. இது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும்.
இதை மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதியுள்ளார். தமிழ் மொழியை போற்றும் வகையில் அமைந்துள்ள இந்த பாடலானது பள்ளி விழாக்கள், அரசு விழாக்களில் பாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நம் தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு நடன ஆசிரியர் ஒருவர், கலைநயத்தோடு நடனம் ஆடியுள்ளார். டிக் டாக் தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை கண்ட பலரும் அந்த ஆசிரியரை பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.