நல பணிகளுக்கு காங்கிரஸ் தொண்டர்களை யூஸ் பண்ணிக்கோங்க… மத நிறுவனங்களுக்கு பிரியங்கா காந்தி கடிதம்…

 

நல பணிகளுக்கு காங்கிரஸ் தொண்டர்களை யூஸ் பண்ணிக்கோங்க… மத நிறுவனங்களுக்கு பிரியங்கா காந்தி கடிதம்…

கொரோனா வைரஸ் எதிர்ப்பு நல பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் அடங்கிய தன்னார்வ குழுவை பயன்படுத்தி கொள்ளும்படி மத நிறுவனங்களுக்கு அந்த கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் உள்ள மத நிறுவனங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேசத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் அடங்கிய தன்னார்வலர்கள் குழுவை அமைத்துள்ளேன். நலப்பணிகளை மேற்கொள்ள உங்களுக்கு தன்னார்வ தொண்டர்கள் தேவை என்றால் எங்களது மாவட்ட குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.

மத அமைப்புகள்

நாடு கொரோனா வைரஸ் நெருக்கடி வழியாக செல்கிறது மற்றும் தினக் கூலி தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் நிலைமை கவலையளிப்பதாக உள்ளது. அவர்கள் முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு தங்கு தடையில்லாத உணவு சப்ளையை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.

காங்கிரஸ் தொண்டர்கள்

நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் தங்களது வீடுகளுக்கு பசி மற்றும் தாகத்தோடு திரும்பி வருகின்றனர். மக்கள் வேலையை இழந்தனர். பணியாளர்களின் பணி நிறுத்தப்பட்டது. சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் நின்று விட்டது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.