நல்லா பழகிட்டு கழட்டிவிடுவியா?  பெண்ணை கத்தியால் குத்திய கும்பல்!

 

நல்லா பழகிட்டு கழட்டிவிடுவியா?  பெண்ணை கத்தியால் குத்திய கும்பல்!

சென்னை எம்ஜிஆர் நகர் புகேழந்தி தெருவைச் சேர்ந்தவர் பிருந்தா (31). இவர் அதே பகுதி  சூளைபள்ளம் வெங்கட்ராமன் சாலையில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். 

சென்னை எம்ஜிஆர் நகர் புகேழந்தி தெருவைச் சேர்ந்தவர் பிருந்தா (31). இவர் அதே பகுதி  சூளைபள்ளம் வெங்கட்ராமன் சாலையில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். 

பிருந்தாவிற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நண்பராக  திலீபன் (34) என்பவர் அறிமுகமானார். இருவரும்  நெருக்கமாக பழகி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிருந்தா, திலீபன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பிருந்தா திலீபனை தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த திலீபன் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான ஆர்த்தி வேலு, டிரைவர் கோகுல், ஆனந்த் ஆகிய மூன்று பேரையும் அழைத்து கொண்டு நேற்று அழகு நிலையம் சென்று பிருந்தாவிடம் தகராறில் ஈடுபட்டார். திடீரென பிருந்தாவை சரமாரியாக தாக்கிய கும்பல் கத்தியால் வெட்டிவிட்டு அவரிடமிருந்து ஒன்றரை சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இதில் கன்னத்தில் வெட்டுபட்ட பிருந்தா  எம்ஜிஆர் நகர் போலிசில் புகார் அளித்தார். பிருந்தாவின் புகாரில் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் திலீபன் மற்றும் அவரது கூட்டாளிகளை நேற்று இரவு கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.