’நல்லவங்க மாதிரி ஆக்ட் குடுக்கிறவங்க நாமினேட் ஆன பிறகு நாசமா போறாய்ங்க’… யாரைக் கலாய்க்கிறார் கஸ்தூரி?…

 

’நல்லவங்க மாதிரி ஆக்ட் குடுக்கிறவங்க நாமினேட் ஆன பிறகு நாசமா போறாய்ங்க’… யாரைக் கலாய்க்கிறார் கஸ்தூரி?…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சண்டைகள், சர்ச்சைகள் என்று சூடு பிடிக்க துவங்கியுள்ளது. நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பொம்மைக்காக ஆரம்பித்த சண்டை கலாச்சாரம் ஒரு அளவிற்கு போய்விட்டது

பிக்பாஸ் சீஸன் 3’ குறித்து தொடர் மாதிரி எழுத நடிகை கஸ்தூரி நாளிதழ் ஒன்று வாய்ப்புக்கொடுத்திருந்தால் பொழந்துகட்டியிருப்பார் என்று சொல்லுமளவுக்கு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ரசித்து,கலாய்த்து, சிண்டு முடிந்து விட்டு தனது ட்விட்டர், முகநூல் பக்கங்களில் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்.

biggboss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சண்டைகள், சர்ச்சைகள் என்று சூடு பிடிக்க துவங்கியுள்ளது. நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பொம்மைக்காக ஆரம்பித்த சண்டை கலாச்சாரம் ஒரு அளவிற்கு போய்விட்டது. மதுமிதா தன்னை ஒரு தமிழ் பெண் என்று அங்கீகாரம் செய்து கொள்ள, உடனே மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மதுமிதா பக்கம் திரும்பினார்.ஆரம்பத்தில் இந்த சண்டை அபிராமிக்கு மதுமிதாவிற்கு மட்டும் தான் துவங்கியது. அதன் பின்னர் அனைத்து பெண் போட்டியாளர்களும் (லாஸ்லியாவை தவிர) மதுமிதா பக்கம் திரும்பி ஒரே ரகளை செய்து விட்டனர். 

 

நேற்று நடைபெற்ற இந்த சண்டையை குறிப்பிட்டு கஸ்தூரி ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், …லூசு பொண்ணு Vs தமிழ் பொண்ணு, எங்க ஊருல தண்ணியே இல்லை, அதனால குழாயடில ஆளே இல்லை, குழாயடி சண்டையும் பாக்கமுடியறது இல்லை… அந்த குறையை போக்க வந்த பிக் பாஸுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். 

அடுத்து நாமினேஷன் பட்டியல் குறித்தும் காரசாரமாக கமெண்ட் அடித்த கஸ்தூரி,…நல்ல்ல்ல்லவங்க மாதிரி  ஆக்ட் குடுத்தவங்க  நாமினேட்  ஆனபிறகு நாசமா போவுறாங்க…  இதற்குத்தானே ஆசைப்பட்டாய்  #biggboss’ என்று பதிவிட்டிருக்கிறார். சேரன் சார் கஸ்தூரிக்கு உங்க படங்கள்ல எதாவது ஒரு பிட்டு ரோலாவது குடுத்திருந்தா இவ்வளவு நாசம் பண்ணியிருக்கமாட்டாங்கன்னு தோணுது.