நல்லது செய்ய போக… கடைசியில் உயிரை விட்ட ஆட்டோ டிரைவர் : திருச்சியில் சோகம்!

 

நல்லது செய்ய போக… கடைசியில் உயிரை விட்ட ஆட்டோ டிரைவர் : திருச்சியில் சோகம்!

பெண்ணை கிண்டல் செய்தவரை, தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது

பெண்ணை கிண்டல் செய்தவரை, தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார் கோவில் அடுத்த முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர்  ஆட்டோ ஓட்டுநர் அப்துல்லா –  தஸ்வின் பானு தம்பதியினர். இவர்களுக்கு   2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 19ஆம்  தேதி அப்துல்லா சவாரிக்காக திருவானைக்காவலுள்ள மண்டபம் ஒன்றிற்குச் அப்துல்லா சென்றுள்ளார். அப்போது திருமண நிகழ்ச்சியில் பிரியாணி தீர்ந்து விட்டதால், பெண் ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்த கடைக்குச் செல்ல ஆட்டோ ஓட்டுநர் அப்துல்லாவை அழைத்து சென்றுள்ளார். 

murder

அப்போது கடையிலிருந்த ஊழியர்களிடம் ஆர்டர் கொடுத்த அளவைவிட,  குறைவான பிரியாணி பொட்டலங்களே இருந்ததாகப் புகார் கூற அப்போது மதுபோதையில் அங்கிருந்த நாகராஜ் என்பவர் பிரியாணி கடைக்கு ஆதரவாகப் பேசி, அந்த பெண்ணை கிண்டல் செய்துள்ளார்.  அதைக்கண்ட அப்துல்லா அவரை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், தனது நண்பர்கள் தயாளன் என்ற ஸ்ரீராம், முன்னா,கோகுல்நாத் என்ற பாரதி ஆகியோரை அழைத்து வந்து, அப்துல்லாவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

murder

இதில் நிலைகுலைந்த அப்துல்லா அங்கேயே சரிந்துள்ளார். இதையடுத்து குற்றவாளிகள் நால்வரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.   இருப்பினும் சிகிச்சை பலனின்றி அப்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஸ்ரீரங்கம் போலீசார், பிரியாணி கடையிலிருந்த சிசிடிவி கேமிரா உதவியுடன் தப்பியோடிய நால்வரையும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.