நலிவடைந்த சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் விவேக் 3.5 லட்சம் நிதி உதவி

 

நலிவடைந்த சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் விவேக் 3.5 லட்சம் நிதி உதவி

இந்தியா ஊரடங்கு உத்தரவை அடுத்து முடங்கியுள்ளது.  21 நாட்கள் அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  சென்னையில் உள்ள ஆதரவற்றோர்களுக்குத் தனியார் நிறுவனங்களும்,  தன்னார்வலர்களும்  உணவினை அளித்து வருகிறார்கள். மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

vivek

இதன் காரணமாக  பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தயாரிப்பாளர்கள் , நடிகர்கள் , இயக்குநர்கள் வேளை சோற்றுக்குக் கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேருக்கு ஒரு மூட்டை அரசி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனையேற்ற திரைபிரபலங்கள் தங்களாலான பொருட்கள் மற்றும் பணத்தை நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நிவாரணமாக வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் 3.5 லட்சம் நிதி உதவியை நலிவடைந்த சினிமா தொழிலாளர்களுக்கு நிவாரணமாக வழங்கியுள்ளார்.