நலமுடன் வீடு திரும்பினார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

 

நலமுடன் வீடு திரும்பினார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும், ஏழு நாட்கள் தனது டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தில் சுயமாக தனிமையில் இருந்ததாகவும் மார்ச் 27 அன்று அறிவித்தார். அவர் ஒரு வாரத்தில் குணமடைந்து வெள்ளிக்கிழமை மீண்டும் வெளிவர திட்டமிடப்பட்டிருந்தார்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும், ஏழு நாட்கள் தனது டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தில் சுயமாக தனிமையில் இருந்ததாகவும் மார்ச் 27 அன்று அறிவித்தார். அவர் ஒரு வாரத்தில் குணமடைந்து வெள்ளிக்கிழமை மீண்டும் வெளிவர திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு இன்னும் அதிக காய்ச்சல் தொடர்வதால் அவர் வீட்டிலேயே இருப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 10 நாட்களுக்குப் பிறகு கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட ஒருசில மணி நேரங்களிலேயே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

போரிஸ் ஜான்சன்

இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், வீடு திரும்பியிருந்தாலும் அவரால் தனது அலுவலக பணிகளை தொடர முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.