நர்சு பிரசவம் பார்த்ததால் தாயும், குழந்தையும் உயிரிழப்பு!

 

நர்சு பிரசவம் பார்த்ததால் தாயும், குழந்தையும் உயிரிழப்பு!

ராமநாதபுரத்தில் நர்சு ஒருவர் பிரசவம் பார்த்ததால் தாயும், குழந்தையும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமநாதபுரத்தில் நர்சு ஒருவர் பிரசவம் பார்த்ததால் தாயும், குழந்தையும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆர்.எஸ்.மடை பகுதியைச் சேர்ந்த முருகேசனின் மனைவி கீர்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியிலிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர் இல்லாததால் பணியிலிருந்த நர்ஸ் பிரசவம் பார்த்துள்ளார். அப்போது கீர்த்திகாவுக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. மேலும் குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே கீர்த்திகாவும் உயிரிழந்துள்ளார். 

baby

இதையடுத்து கீர்த்திகா மற்றும் குழந்தையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவர் இல்லாமல் நர்ஸ் பிரசவம் பார்த்ததாலேயே இருவரும் உயிரிழந்ததாகக்கூறி கீர்த்திகாவின் பெற்றோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, தாயும், குழந்தையும் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்திவருவதாகவும், தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.