நரேந்திர மோடி போதையில் இருக்கிறார்: வைகோ கடும் விமர்சனம்

 

நரேந்திர மோடி போதையில் இருக்கிறார்: வைகோ கடும் விமர்சனம்

பிரதமர் மோடி விதவிதமாக உடை அணிவது, தினம் ஒரு நாட்டிற்கு செல்வது என 2 போதைகளில் இருக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்

சென்னை: பிரதமர் மோடி விதவிதமாக உடை அணிவது, தினம் ஒரு நாட்டிற்கு செல்வது என 2 போதைகளில் இருக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். 4 மாதமாக மழை, வெயில், பனி என்று பார்க்காமல், சாலையில் கிடந்தார்கள். ஆனால் அவர்களை பார்க்க 5 நிமிடங்கள் ஒதுக்காத பொறுப்பற்ற ஒரு பிரதமர் பதவியில் இருப்பது இந்த நாட்டுக்கு சாபக்கேடு. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்க்க தமிழ்நாட்டுக்கு வரவில்லை.

விதவிதமாக உடைகள் உடுத்துவது, தினம் ஒரு நாட்டிற்கு செல்வது என 2 போதைகள் மோடிக்கு உள்ளன. இதில் இருந்து அவர் ஒரு காலமும் வெளியில் வரமுடியாது. அவரிடம் இருந்து பதவியையும், அதிகாரத்தையும் மக்கள் பறிக்க வேண்டும் என்றார்