நரிக்கணக்கு போடும் கமல்; பலிகடா ஆவேன் என்று அடம்பிடிக்கும் ரஜினி: நமது அம்மா நாளிதழ் விமர்சனம்!

 

நரிக்கணக்கு போடும் கமல்; பலிகடா ஆவேன் என்று அடம்பிடிக்கும் ரஜினி: நமது அம்மா நாளிதழ் விமர்சனம்!

எலியும் பூனையும் இணைந்து குடித்தனம் நடத்தப் போகிறேன் என்பதற்குச் சமம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

ரஜினியும்  கமலும் மக்கள்நலனுக்காக இணைந்து செயல்படுவோம் என்று  தெரிவித்துள்ளனர் . இது தமிழகத்தில் ஒரு விவாத பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் பதினாறு வயதும் பதராகும் பொழுதும் என்ற தலைப்பில் நமது அம்மா நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.  

naamadhu amma

அதில், ‘சினிமாவில் ரஜினியோடு போட்டி போட்டு தோற்றுவிட்ட கமல், அவரை அரசியலில் தன்னோடு இணைத்து ரஜினியின் தனிச்செல்வாக்கை மறைத்துவிட நரிக்கணக்கு போடுகிறார். ரஜினியும் வலியச் சென்று பலிகடா ஆவேன் என்பது தான் பரிதாபம். ரஜினி  கமலோடு கரம் கோர்ப்பது, எலியும் பூனையும் இணைந்து குடித்தனம் நடத்தப் போகிறேன் என்பதற்குச் சமம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

rajini

மேலும் அந்த கட்டுரையில், ரஜினியின் கதாநாயகன் பீடத்தை தகர்த்தெறியக் கமல் நேரம் பார்த்து காத்திருக்கும் வேளையில், ரஜினியே அந்த வாய்ப்பை வலியச் சென்று வழங்குகிறார் என்றால் சும்மாவா விடுவார் உத்தமவில்லன். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சீடரான கமல்ஹாசனிடமிருந்து ரஜினி பெறப் போகும் பாடம் ஆறாத காயமாகும், மாறாத தழும்பாகும்’ என்று விமர்சித்துள்ளது.     

rajini

முன்னதாக எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்  என்று ரஜினி கூறியதற்கு, நமது அம்மா நாளிதழில், பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த், கன்னித்தமிழ் பூமியின் சூப்பர் ஸ்டார் ஆவோம் என கனவில்கூட நினைத்திருக்க மாட்டார் என்று பதிலடி  கொடுத்திருந்தது  கவனிக்கத்தக்கது.