நரவேட்டையாடப்படும் வீடியோ… கொடூரமாக வெளியேற்றப்படும் முஸ்லீம்கள்..!

 

நரவேட்டையாடப்படும் வீடியோ… கொடூரமாக வெளியேற்றப்படும் முஸ்லீம்கள்..!

வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு உடனடியாக அவர்கள் குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட கொடுமைகள் நடந்துள்ளது.

கடந்த பத்து நாட்களாக இணையதள வசதிகள் துண்டித்த காரணமாக அஸ்ஸாம் அரசின் இந்த நரவேட்டை வெளியுலகுக்கு தெரியாமலிருக்க, விஷயத்தை கேள்விப்பட்ட அஸ்ஸாம் மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிர்வாகிகள் காவல்துறை கெடுபிடிகளை மீறி எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத திறந்தவெளி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 426 குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 1800 நபர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த ஏக்கத்துடன் வானத்தை வெறித்து பார்த்தபடி உள்ளனர்.

 

முதல் கட்டமாக அஸ்ஸாம் மாநிலம் பிஸ்வனாத் மாவட்டத்தில் சோட்டியா தொகுதிக்குட்பட்ட ஒரு கிராமத்தில் வசித்து வந்த 426 முஸ்லிம் குடும்பங்கள் தங்கள் வீடுகளிலிருந்து தொகுதி பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ பத்ம ஹஸாரிகா தூண்டுதலில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு உடனடியாக அவர்கள் குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட கொடுமைகள் நடந்துள்ளது.

தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி மக்கள் கிளர்ச்சிகள் தொடரும் நிலையில் சத்தமில்லாமல் சட்டத்தை இரக்கமின்றி அமுல்படுத்த துவங்கியுள்ளனர்.