‘நம்மை வெல்ல யாரும் இல்லை’ – செந்தில் பாலாஜி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முழக்கம்!

 

‘நம்மை வெல்ல யாரும் இல்லை’ – செந்தில் பாலாஜி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முழக்கம்!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

கரூர்: கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக பார்க்கப்பட்ட அமமுக கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் செந்தில் பாலாஜி, கடந்த 14ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.  

இதனையடுத்து, ஸ்டாலின் முன்னிலையில் அவரது ஆதரவாளர்களை திமுகவில் இணைய வைப்பதற்காக, கரூர் திருமாநிலையூர் அருகே பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை செந்தில் பாலாஜி முன் நின்று ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 30,000 பேர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். 

senthil balaji

இந்த விழாவில் சிறப்புரையாற்றிய ஸ்டாலின், “மக்கள் கூட்டத்தை காணும்போது நம்மை வெல்ல யாரும் இல்லை, எவரும் பிறக்கப்போவதும் இல்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. எந்த பொறுப்பில் இருந்தாலும் மக்களின் ஒருவனாக இருந்து கடமையாற்றுவேன்.

தாய் தந்தையை விட்டு பிள்ளைகள் பிரியலாம், அவர்கள் மீண்டும் வருவதை பெற்றோர் ஆவலோடு வரவேற்பார்கள். புதிய இயக்கத்தில் இணைந்ததாக பார்க்கவில்லை, ஏற்கனவே இருந்த கட்சிக்கு வந்திருக்கிறீர்கள். நல்ல பிள்ளைகளாக உங்களை திமுக-வில் இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தாமதமாக வந்தாலும் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள்.

ஜனநாயக போர்க்களத்தில்தான் நமக்கு நிறைய பணிகள் உள்ளன. 4 மாநில தேர்தல்களில் பிரதமர் மோடி எதிர்பார்க்காத திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கத்தான் போகிறது” என பேசியுள்ளார்.