நம்மாளு சும்மா இருந்தாலும் இம்ரான் கான் விடமாட்டார் போல! கர்தார்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்க சித்துவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்

 

நம்மாளு சும்மா இருந்தாலும் இம்ரான் கான் விடமாட்டார் போல! கர்தார்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்க சித்துவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்

பாகிஸ்தானில் நவம்பர் 9ம் தேதி நடைபெற உள்ள கர்தார்பூர் வழித்தட தொடக்க விழாவில் பங்கேற்க நம்ம ஊரு முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய அரசியல்வாதியுமான சித்துவுக்கு இம்ரான் கான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தனது கடைசி காலத்தை கர்தார்பூர் பகுதியில் கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் பல 100 ஆண்டுகளுக்கு முன்பு கர்தார்பூரில் அவரது நினைவாக தர்பார் சாஹிப் என்ற பெயரில் குருத்வாரா கட்டப்பட்டது. இங்கு செல்வது சீக்கியர்களின் வாழ்நாள் கடமையாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையில் கர்தார்பூர் பகுதி உள்ளது. இதனால் அந்நாட்டுக்கு விசா எடுத்து செல்வதில் சிரமம் இருந்து வந்தது.

கர்தார்பூர் குருத்வாரா

இதனையடுத்து இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாரவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது வழித்தடம் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இந்திய பகுதியில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை அடுத்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பகுதியில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை அதற்கு அடுத்த நாள் (9ம் தேதி) அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும்  தொடங்கி வைக்க உள்ளனர். நவம்பர் 11ம் தேதி முதல் யாத்ரீகர்கள் கர்தார்பூர் குருத்வாராவுக்கு புனித பயணம் மேற்கொள்ளலாம்.

இம்ரான் கான்பாகிஸ்தான் பகுதியில் 9ம் தேதி நடைபெறும் கர்தாபூர் வழித்தடம் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு பஞ்சாப் எம்.எல்.ஏ. நவ்ஜோத் சிங் சித்துவுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து இம்ரான் கானின் தெரிக் இ இன்சாப் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்தாபூர் வழித்தட தொடக்க விழாவுக்கு நவ்ஜோத் சிங் சித்துவுக்கு அழைப்பு விடுக்க இம்ரான் கான் உத்தரவிட்டார். இதனையடுத்து சித்துவிடம் தொலைப்பேசியில் இது தொடர்பாக பேசப்பட்டது. அவருக்கு கர்தார்பூர் வழித்தட தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாக்.ராணுவ தளபதியை கட்டிபிடிக்கும் சித்து

இந்த ஆண்டு தொடக்கத்தில் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சித்து அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டிபிடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கர்தார்பூர் குருத்வாராவுக்கு செல்ல உள்ள முதல் யாத்ரீகர்கள் பட்டியலில் சித்துவின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.