நம்பி வந்த பெண்ணை நண்பனுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்

 

நம்பி வந்த பெண்ணை நண்பனுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்

நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும், ஆவரைக்குளத்தைச் சேர்ந்த ஏசுநேசன் என்ற இளைஞருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது

சமூக வலைதளங்களின் வாயிலாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பேஸ்புக் அல்லது வேறு சமூக வலைதளங்களின் மூலம் எதிர்பாலினத்தாருடன் பழகி பணம் பறிப்பது, பாலியல் வன்புணர்வு செய்வது என பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருவதை காண்கிறோம். இப்படியான ஒரு கொடுமைதான் தற்போது அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் உள்ளிட்ட 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 

பாலியல்

நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும், ஆவரைக்குளத்தைச் சேர்ந்த ஏசுநேசன் என்ற இளைஞருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு பிறகு மாணவியை காதலிப்பதாக கூறியிருக்கிறான் ஏசுநேசன். அவன் காதலை ஏற்க மறுத்திருக்கிறார் மாணவி, பின்னர் தொடர்ந்து டார்ச்சர் அளித்ததால் காதலிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

h

உன்னை சந்திக்க வேண்டும் என ஆசை வார்த்தை காட்டி நேரில் அழைத்துள்ளான். நேரில் வந்த மாணவியை ஏசுநாதன் ஒரு காரில் ஏற்றி சென்றிருக்கிறான். கார்-ஐ அவனது நண்பன் ஒருவன் ஓட்டியுள்ளான். கொஞ்சம் தூரம் சென்ற பின்பு மறைவான இடத்தில் வைத்து அந்த மாணவியை பாலியன் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், மாணவியின் நகைகளையும் பிடிங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Czv

மாணவி வீட்டில் நகை குறித்து விசாரித்தபோது உண்மை தெரிய வந்துள்ளது. பின்னர் இதுகுறித்து காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஏசுநேசனையும், அவரது நண்பரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சகோதரர் சுட்டுக்கொலை; தலைமறைவாக இருந்த திமுக நிர்வாகி கைது!