நம்பி காரில் சென்ற பெண்! உடை கிழிந்த நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த பரிதாபம்! 

 

நம்பி காரில் சென்ற பெண்! உடை கிழிந்த நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த பரிதாபம்! 

திருப்பூர் அருகே பிரின்டிங் கம்பனி நடத்தி வருபவர் சரவணகுமார். சோமனூர் நிறுவனத்தில் கல்லூரி படிக்கும் இளம் பெண் ஒருவர் பார்ட் டைம் வேலையாக சரவணக்குமாரிடம் சேர்ந்திருக்கிறார்

திருப்பூர் அருகே பிரின்டிங் கம்பனி நடத்தி வருபவர் சரவணகுமார். சோமனூர் நிறுவனத்தில் கல்லூரி படிக்கும் இளம் பெண் ஒருவர் பார்ட் டைம் வேலையாக சரவணக்குமாரிடம் சேர்ந்திருக்கிறார். வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வரும் அந்த பெண், அன்றைய தினம் இரவு 10.30 மணியாகியும் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் தவித்துக்கொண்டிருந்தனர். காவல்துறையில் புகார் அளிக்கலாம் என நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் வீட்டிற்கு ஆட்டோவில் வந்து இறங்கினார் அந்த இளம்பெண்… உடை கிழிந்த நிலையில் உடைகள், உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கதறிக்கொண்டு வந்த பெண்ணை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.   

rape

என்ன நடந்தது என அந்த பெண்ணிடம் பெற்றோர் கேட்டுள்ளனர்.  அப்போது, “வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் ஓனர் சரவணகுமார், அவரது காரில் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று கூறினார். நானும் அவரை நம்பி சென்றேன். ஆனால் அவர் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். அங்கு என்னை அவர் வன்கொடுமை செய்ய முயற்சித்தார். ஆனால் நான் அவரிடமிருந்து தபி வந்தேன். அப்போது அருகிலிருந்த பள்ளம் ஒன்றில் குதித்ததில் உடலில் காயம் ஏற்பட்டது” என பதைபதைப்புடன் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சரவணகுமார் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சரவணகுமாரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.