நன்றி சொன்ன ஷங்கர்; எதற்கு தெரியுமா?

 

நன்றி சொன்ன ஷங்கர்; எதற்கு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தை பார்த்து ரசித்து ஊக்குவித்த ரசிகர்களுக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தை பார்த்து ரசித்து ஊக்குவித்த ரசிகர்களுக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இயக்குநர் ஷங்கர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்வீட்டில், ‘2.0 படத்தை பார்த்து ரசித்து ஊக்குவித்த ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. படத்திற்கு ஆதரவு அளித்த ஊடகங்களுக்கும், தங்கள் குழுவின் கடின உழைப்பை மதித்தவர்களுக்கும் நன்றி. 2.0 படத்துக்காக தங்களது வாழ்வின் ஒரு பகுதியை அற்பணித்த படக்குழுவுக்கு மிக்க நன்றி’ என தெரிவித்துள்ளார்.