நன்றியுள்ள நாய்; உயிரை கொடுத்து 30 பேரின் உயிரை காப்பாற்றிய சோக சம்பவம்!

 

நன்றியுள்ள நாய்; உயிரை கொடுத்து 30 பேரின் உயிரை காப்பாற்றிய சோக சம்பவம்!

கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட நாய், தொடர்ந்து குறைத்து அங்குள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

வளர்ப்பு பிராணிகளில் எப்போதுமே நாய்க்கு தனி இடமுண்டு. நாய் நன்றியுள்ள ஒரு மிருகம். மனிதர்கள் பலரிடம் காணக்கிடைக்காத இக்குணத்தை நாயிடம் காணலாம். அதற்கு மற்றொரு உதாரணமாக இரண்டு சம்பவங்கள் வடமாநிலங்களில் நடந்துள்ளது.


dog


உத்தரப்பிரதேச மாநிலம் பந்தா பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட நாய், தொடர்ந்து குறைத்து அங்குள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதையடுத்து, அங்கு வசித்து வந்த அனைவரும் உயிர் சேதம் ஏதுமின்றி பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர். ஆனால், இதில் சோக சம்பவம் என்னவென்றால், தீ விபத்தினால் அங்குள்ள சிலிண்டர் ஒன்று வெடித்ததில் மனிதர்களின் உயிரை காப்பாற்றிய அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது.


dog


அதேபோல், தன் உயிரை கொடுத்து மற்றொரு நாயானது ஒரு குடும்பத்தையே காப்பாற்றியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் திபாகர் ரய்தா என்பவர் தனது வீட்டில் டைசன் என்றொரு நாயை வளர்த்து வந்தார். டால்மேஷியன் வகையை சேர்ந்த அந்த நாய், காட்டுப்பகுதியில் இருந்து 4 பாம்புகள் திபாகர் ரய்தா வீட்டுக்குள் படையெடுத்து வருவதை கண்டு அவைகளுடன் சண்டையிட்டு, அவைகளை கொன்றுள்ளது. ஆனால், அடுத்த சிறிது நேரத்தில் பாம்புகள் தாக்கிய விஷம் ஏறி டைசன் எனும் அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது.


இதையும் வாசிங்க


பணக்காரன் போல் நடித்து மாணவியை காதல் வலையில் சிக்க வைத்த கட்டிடத் தொழிலாளி: சிக்கியது எப்படி?