நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் பரிதாப பலி: பிறந்த நாளில் நடந்த கொடூரம்!

 

நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் பரிதாப பலி: பிறந்த நாளில் நடந்த கொடூரம்!

பிறந்த நாள் கொண்டாடச் சென்ற இளம்பெண் நண்பர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில்,  பரிதாபமாக உயிரிழந்தார். 

மகாராஷ்டிரா: பிறந்த நாள் கொண்டாடச் சென்ற இளம்பெண் நண்பர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில்,  பரிதாபமாக உயிரிழந்தார். 

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்,  கடந்த ஜூலை 7ஆம் தேதி நண்பர்களைப் பார்க்கச் சென்றுள்ளார். அன்று அந்த பெண்ணுக்குப் பிறந்த நாள் என்பதால் அவர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். பின்னர் அங்கிருந்த நான்கு நண்பர்களும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

harassment

பின்னர் அங்கிருந்து அவுரங்காபாத்துக்குத் திரும்பிய அந்தப் பெண், இதுகுறித்து வீட்டில் யாரிடமும் கூறவில்லை. இதையடுத்து அந்த பெண்ணிற்கு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்துள்ளனர்.

hemavathi

இதையடுத்து இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நால்வரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த பெண்  நேற்று உயிரிழந்தார். இதனால் மகளிர் அமைப்புக்கள்  பல காவல்நிலையத்தில் முன் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.