நண்பரை பார்க்க தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு சென்ற நபர் கைது!

 

நண்பரை பார்க்க தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு சென்ற நபர் கைது!

கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்

கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மக்கள் செல்லாமல் இருக்க அப்பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதே போல கோவையிலும் 9 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை குனியமுத்தூரில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் வசித்து வரும் நண்பரைக் காண தமமுக நிர்வாகி பெரோஸ்கான் செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

ttn

 

அந்த தகவலின் படி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டும் அதனை மீறி சென்றதாக தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு மணி நேரம் முக கவசம் கூட அணியாமல் அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. 144 தடை உத்தரவை மீறி சென்றதால் போலீசார் பெரோஸ்கானை அதிரடியாக கைது செய்துள்ளனர்.