நண்பருடன் செல்போனில் பேச்சு…திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த பெண்ணுக்கு கத்தி குத்து!

 

நண்பருடன் செல்போனில் பேச்சு…திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த பெண்ணுக்கு கத்தி குத்து!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ரத்தினம்மாள் செவிலியர் படிப்பு முடித்து விட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பனி புரிந்து வந்துள்ளார்

ஈரோடு: திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த செவிலியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ரத்தினம்மாள் செவிலியர் படிப்பு முடித்து விட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பனி புரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ரத்தினம்மாளுக்கு தேவராஜ் (29) என்பவருடன் திருமணம் பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்த ரத்தினம்மாள், தனது நண்பருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது. இதனால், சந்தேகமடைந்த தேவராஜ், அவருடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ரத்தினம்மாள் திருமணத்தை நிறுத்தி விடுமாறு பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன்படி தேவராஜின் பெற்றோருக்கு திருமணத்தை நிறுத்தி விடலாம் என தகவல் கொடுத்துள்ளனர் ரத்தினம்மாள் பெற்றோர்.

stab

இதையத்து, ரத்தினம்மாள் வீட்டுக்கு வந்த தேவராஜ், அவருடன் தனியாக பேச வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு அவரது பெறோர்கள் மறுப்பு தெரிவிக்கவே, வாக்குவாதம் முற்றி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரத்தினம்மாளின் முதுகில் தேவராஜ் குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தேவராஜை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

arrest

தொடர்ந்து, ரத்தினம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தேவராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.