நண்பரிடம் தூக்கு போட்டு கொள்ள போவதாக நடித்த இளைஞர்: வினையாக முடிந்த விளையாட்டு; அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

நண்பரிடம் தூக்கு போட்டு கொள்ள போவதாக நடித்த இளைஞர்: வினையாக முடிந்த விளையாட்டு; அதிர்ச்சி தரும் சம்பவம்!

குடிபோதையில் இளைஞர் ஒருவர் தூக்குப் போட்டுக் கொள்வதாக விளையாடிய நிலையில் அவர் உண்மையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி : குடிபோதையில் இளைஞர் ஒருவர் தூக்குப் போட்டுக் கொள்வதாக விளையாடிய நிலையில் அவர் உண்மையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே திருச்சானூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அப்பகுதியில் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார்.  இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. 

sivakumar

இந்நிலையில் வழக்கம்போல் நேற்றுபணியை முடித்த பிறகு, அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு நேற்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார் சிவக்குமார். அப்போது அளவுக்கு மீறிய குடிபோதையில்  நண்பருக்கு வீடியோ கால் செய்த சிவக்குமார் ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விளையாட்டாகக் கூறி நாடகமாடியுள்ளார். 

ஆனால் எதிர்பாராத விதமாக கழுத்தை சுற்றி இருந்த துணி, அவரது கழுத்தை நெரித்துள்ளது. போதையிலிருந்ததால், அதிலிருந்து மீள முடியாமல் தவித்த சிவக்குமார்  சிறிது நேரத்திலேயே மூச்சு திணறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நண்பன் இறப்பதை கண்முன்னே கண்ட சிவகுமாரின் நண்பர் பதறிப்போய் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

andhra

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவக்குமாரின்  உடலை கைப்பற்றித் தகவலறிந்து பிரேத பரிசோதனைக்காக அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிபோதையில் விளையாட்டாக இளைஞர் செய்த செயல் அவருக்கே வினையாக முடிந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்க: கணவரின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பெண் ஆய்வாளர்?! : இறுதி சடங்கில் கதறிய பெண் காவலர்கள்!