நண்பனை கிணற்றில் தள்ளி கொலை செய்த வாலிபர்கள்; போதை தலைக்கு ஏறியதால் அட்டகாசம்!

 

நண்பனை கிணற்றில் தள்ளி கொலை செய்த வாலிபர்கள்; போதை தலைக்கு ஏறியதால் அட்டகாசம்!

வாணியம்பாடியில் வாலிபர்கள் சிலர் மதுபோதையில் நண்பனையே கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்: வாணியம்பாடியில் வாலிபர்கள் சிலர் மதுபோதையில் நண்பனையே கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சாமந்திகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார். தச்சுதொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று தன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது மதுபோதை அதிகமான நிலையில், நவீன்குமாரை அவரது நண்பர்கள் கிணற்றில் தள்ளிவிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, நீரில் தத்தளித்த அவரை மீட்காமல், செல்ஃபோனில் படம் எடுத்து விளையாடியுள்ளனர். சிறிது நேரத்தில் நவீன்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து, வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நவீன்குமாரின் உடலை மீட்ட போலீசார், நண்பர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மது போதையில் இளைஞர்கள் தன் நண்பனையே கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.