நட்சத்திர ஓட்டலில் உள்ள பாரில் போதை மாத்திரைகள் விற்பனை!

 

நட்சத்திர ஓட்டலில் உள்ள பாரில் போதை மாத்திரைகள் விற்பனை!

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்களில் சில மர்ம நபர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்களில் சில மர்ம நபர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன் தலைமையில் போதை பொருள் தடுப்பு புலனாய்வு அதிகாரிகள் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் பார்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Tablet

அப்போது எழும்பூரில் உள்ள ரேடிசன் புளூ என்ற நட்சத்திர ஓட்டலில் அமைந்துள்ள பாரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெதிலீன் டையாக்சி மெத்தாம்பெட்டமைன் மற்றும் லைசர்ஜிக் ஆசிட் டைதிலாமைட் ஆகிய போதை மாத்திரைகளை சிலர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அங்கு நடத்திய தீவிர விசாரணையில் ராஜா ஆனந்த் மற்றும் ஹரிகரன் ஆகிய 2 பேர் 10 க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை வைத்து பாரில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 

உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த 10 மெதிலீன் டையாக்சி மெத்தாம்பெட்டமைன் மற்றும் 2 லைசர்ஜிக் ஆசிட் டைதிலாமைட் ஆகிய போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலுக்கும் தொடர்பு உண்டா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.