நடை சாத்திய பிறகு கருவறையில் ஊஞ்சலாடிய பத்ரகாளியம்மன்! வைரலாகும் வீடியோ

 

நடை சாத்திய பிறகு கருவறையில் ஊஞ்சலாடிய பத்ரகாளியம்மன்! வைரலாகும் வீடியோ

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோவிலில் நடை சாத்தப்பட்ட பின்னர் கருவறையிலிருந்து ஊஞ்சல் ஆடுவது போன்ற சத்தம் கேட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோவிலில் நடை சாத்தப்பட்ட பின்னர் கருவறையிலிருந்து ஊஞ்சல் ஆடுவது போன்ற சத்தம் கேட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

கார்த்திகை தீபத்தன்று அந்தியூரிலுள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் வழிபாடு முடிந்து இரவில் நடையை சாத்திவிட்டு பூசாரி வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அதன்பின் கருவறையிலிருந்து ஊஞ்சலாடும் சத்தம் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதையடுத்து கோயில் செயல் அலுவலர் சரவணன் அன்றைய தினம் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது அதில், கருவறை முன்பு உள்ள திரையில் வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் ஊஞ்சல் ஆடுவது போன்று பதிவாகி இருந்தது. சுமார் 2 மணி நேரம் இந்த காட்சி தெரிவதாகவும், இது அம்மன் ஊஞ்சல் உற்சவ காட்சி போல் இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.