நடைப் பயிற்சி மேற்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

 

நடைப் பயிற்சி மேற்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

மெரினாவை சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யும் வகையில் அங்கு நடைப் பயிற்சி மேற்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது

சென்னை: மெரினாவை சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யும் வகையில் அங்கு நடைப் பயிற்சி மேற்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

ஆழ்கடலில் மீன் பிடிப்பு தொடர்பான மத்திய அரசின் புதிய விதிகளுக்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகியிருந்தார்.

அப்போது மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்த பல்வேறு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது, காலை 6 மணி பிற்பகல் 2 மணி இரவு 10 மணி என மூன்று ஷிப்டுகளில் 250 பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மெரினாவில் கடை அமைக்க ஆயிரத்து 544 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மீன் சந்தை அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து மெரினாவை பராமரிக்க ஒதுக்கப்படும் நிதி, மேற்கொள்ளபடவுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவான அறிக்கையை ஜனவரி மாதம் 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், மெரினாவை சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யும் வகையில் ஒரு மாதத்திற்கு தினமும் காவல்துறை ஆணையருடன், மெரீனாவில் நடைபயற்சி மேற்கொள்ளும் படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.