நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த புதுச்சேரி அமைச்சரிடம் செல்போன் பறித்துச் சென்ற மர்ம நபர்கள்!

 

நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த புதுச்சேரி அமைச்சரிடம் செல்போன் பறித்துச் சென்ற மர்ம நபர்கள்!

புதுச்சேரியின் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன். இவர் புதுவையில் உள்ள கடற்கரையில் தினமும் காலை வாக்கிங் செல்வாராம்.

புதுச்சேரியின் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன். இவர் புதுவையில் உள்ள கடற்கரையில் தினமும் காலை வாக்கிங் செல்வாராம். அதே போல இன்றும் அமைச்சர் கடற்கரையில் வாக்கிங் சென்றுள்ளார். அச்சமயம் அவருடன் காவலுக்கு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. 

ttn

அமைச்சர் கையில் செல்போன் இருப்பதை நோட்டமிட்டுக் கொண்டே வந்த மர்ம நபர்கள், எதிர்பாராத நேரமாகப் பார்த்து அதனைப் பிடுங்கிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அமைச்சர் சார்பில் ஓதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் சோதித்துத் தப்பிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.