நடுரோட்டில நிக்கும் போது அவரு என்ன சொல்லிட்டு போனாரு தெரியுமா? சேரன் குறித்த பிளாஷ்பேக்கை உடைத்த சரவணன்

 

நடுரோட்டில நிக்கும் போது  அவரு என்ன சொல்லிட்டு போனாரு தெரியுமா? சேரன் குறித்த பிளாஷ்பேக்கை உடைத்த சரவணன்

தனக்கும் சேரனுக்கும் இடையே என்ன பிரச்னை என்பதை  நடிகர் சரவணன் உடைத்துள்ளார். 

நடுரோட்டில நிக்கும் போது  அவரு என்ன சொல்லிட்டு போனாரு தெரியுமா? சேரன் குறித்த பிளாஷ்பேக்கை உடைத்த சரவணன்

சென்னை: தனக்கும் சேரனுக்கும் இடையே என்ன பிரச்னை என்பதை  நடிகர் சரவணன் உடைத்துள்ளார். 

பிக் பாஸ் சீசன் 3 மற்ற இரண்டு சீசன்களை  விட சுவாரஸ்யமாகச் சென்று கொண்டிருக்கிறது. காதல், சண்டை, அழுகை. ஏமாற்றம் என அனைத்தும் உள்ளது.  குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாகச் சென்று கொண்டிருந்த சாக்ஷி – கவின் காதல் போர் ஒரு முடிவை எட்டியுள்ளது. 

நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டின் சீனியர்களான  சேரன் மற்றும் சரவணன் இடையே தகராறு ஏற்பட்டது. யார் நடனத்திலும், கதாபாத்திரமும் சரியாக செய்யவில்லை என்ற கேள்விக்கு, சேரன் சரவணனை குறி வைத்தார். இதனால் இவருக்கும் ஏற்பட்ட தகராறில், கொஞ்சம் நேரம் ஹவுஸ்மேட்ஸ் உறைந்து போயினர்.இதையடுத்து வழக்கம் போல பெண்கள் அணி சேரனுக்கு ஆதரவாகப் பேச, அவர்களிடம் சரவணனின் உண்மையான முகம் இதுதான் என்று சேரன் சுட்டிக்காட்டினார். 

cheran

அப்போது மதுமிதா சீனியர்ஸ் நீங்களே சண்டை போட்டுக்கிட்டா நாங்க எங்க போவோம் என்று அழுக, இந்த ஈகோ ஏற்படக் காரணமாக இருந்த சம்பவம் ஒன்றை சரவணன் கூறினார். அதில், 1999-ல் செங்கல்பட்டு அருகே என்னுடைய கார் பஞ்சராகி நின்றது. அப்போது அந்த பக்கம் காரில் சேரன் வந்தார். அப்போது பண கஷ்டத்திலிருந்த நான்,  நடுரோட்டில் நின்று உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டேன். அவர் இல்லை வென்று கூட சொல்லியிருக்கலாம். அதற்கு  அவர் என்ன சொன்னாரு தெரியுமா? எவ்வளவோ உயரத்தைப் பார்த்துவிட்டீர்கள், இப்போது என்னிடம் ஏன்  வாய்ப்பு கேட்குறீங்க என்றார்.அது எனக்கு எவ்வளவு வலியை  தந்தது என்று எனக்கு மட்டும் தான் தெரியும்’ என்றார்.