நடுரோட்டில் ‘வாளால்’ கேக் வெட்டி பர்த்டே கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவர் …வைரல் வீடியோ!

 

நடுரோட்டில் ‘வாளால்’ கேக் வெட்டி பர்த்டே கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவர் …வைரல் வீடியோ!

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  ரவுடி பினு ரவுடிகள் புடைசூழ கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடி பரபரப்பை ஏற்படுத்தியது

இளைஞர்  ஒருவர் நடுரோட்டியில் வாளை கொண்டு கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ காட்சி  இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நண்பர்கள் புடைசூழ ரூபாய் நோட்டுகளான  மாலை, கிரீடம், 4 அடி  வாள்  பரிசாக கொடுக்கப்பட்டது. மேலும் கேக்கில் அந்த நபர் வக்கீல் என்பதற்கான அடையாளமும் போடப்பட்டிருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவ போலீசார் இதுகுறித்த விசாரணையை தொடங்கினர்.

ttn

அதில், வாளால்   கேக் வெட்டி கொண்டாடியது மதுரவாயலை அடுத்த எம்.எம்.டி.ஏ.காலனி பகுதியைச் சேர்ந்த காமேஷ் என்பது தெரியவந்தது.அவர் திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.  கடந்த 11 ஆம் தேதி காமேஷின் பிறந்தநாளையொட்டி அவரது நண்பர்கள் வாளை பரிசாக அளிக்க அதிலேயே கேக் வெட்டியுள்ளார் காமேஷ். அப்போது அவரது நண்பர்கள் சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ttn

முன்னதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  ரவுடி பினு ரவுடிகள் புடைசூழ கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.