நடுரோட்டில் முத்தம்; நள்ளிரவில் குத்தாட்டம்: பிக் பாஸ் தோழிகளின் அலட்டல் அட்ராசிட்டி!
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகா மற்றும் அவரது தோழி ஐஸ்வர்யா ஆகியோரின் வெட்டி பந்தாவிற்கு அளவே இல்லை என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகா மற்றும் அவரது தோழி ஐஸ்வர்யா ஆகியோரின் வெட்டி பந்தாவிற்கு அளவே இல்லை என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் நெருங்கிய தோழிகளாக பல சேட்டைகளை செய்து மக்களின் வெறுப்பையும், அன்பையும் பெற்றனர். இருவரும் தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெட்டி பந்தா காட்டிக் கொள்ளும் விதமாக ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் சமீபத்தில் ஆட்டோ ரைடு சென்று, அதன் லைவ் வீடியோவை ஷேர் செய்து வீண் விளம்பரம் தேடினர். ஆட்டோவில் சென்ற இருவரும் நடுரோட்டில் இறங்கி ஒருவரையொருவர் முத்தம் கொஞ்சி அலப்பறைக் கூட்டினர்.
(friend)Ship rides on auto rickshaw??#BestFriendsForever?#AishwaryaDutta@iamyashikaanand#BiggBossTamil2 pic.twitter.com/8GkiRkEJma
— Aishwarya Dutta Army♥️? (@LoveInDeeAir) December 28, 2018
தற்போது அதைத் தொடர்ந்து யாஷிகா, ஐஸ்வர்யா மற்றும் அவர்களது நண்பர்கள் சிலருடன் நள்ளிரவில், ‘மாரி 2’ படத்தின் ரவுடி பேபி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டிலும் இருவரும் கூட்டு சேர்ந்தால் வீட்டையே ரெண்டாக்கும் இவர்கள், தற்போது வீண் விளம்பரம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.