நடுரோட்டில் போலீஸ் கண்முன் நடந்த பயங்கரம்: கறிக்கடை உரிமையாளரை குத்தி கொலை செய்த வாலிபர்!

 

நடுரோட்டில் போலீஸ் கண்முன் நடந்த பயங்கரம்: கறிக்கடை உரிமையாளரை குத்தி கொலை செய்த வாலிபர்!

நடுரோட்டில் போலீஸ் முன்பே கறிக்கடைக்காரர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்: நடுரோட்டில் போலீஸ் முன்பே கறிக்கடைக்காரர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத், சஞ்சல்குடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாகிர் குரேஷி. இவர் மட்டன் கறிக்கடை நடத்தி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த அப்துல் காஜா என்பவரின் உறவினர் குரேஷியின் ஆட்டோ ரிக்ஷாவை வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இதனிடையே காஜாவின் உறவினருக்கும் குரேஷிக்கும் வாடகை தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் குரேஷியின் கறிக்கடைக்கு வந்த காஜா, குரேஷியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் கடையில் இருந்த கத்தியை கொண்டு காஜா குரேஷியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே குரேஷி இறந்துள்ளார்.

murder

இதுகுறித்து அப்பகுதியில் இருந்த போக்குவரத்து காவலர் அளித்த தகவலின் பேரில்  விரைந்து வந்த போலீசார் கத்தியையும் கைப்பற்றியதோடு காஜாவையும்  கைது செய்தனர். பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ஹைதராபாத் சாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.