நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாட்டம்! சுறாக்களுக்கு இரையான சோகம்!

 

நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாட்டம்! சுறாக்களுக்கு இரையான சோகம்!

வாழ்வின் மொத்த சந்தோஷத்தையும் ஒரே சமயத்தில் கொண்டாடித் தீர்த்து விட வேண்டும் என்கிற ஆசை பெரும்பாலான மனிதர்களுக்கு ஏற்படுவது உண்டு. அப்படி, தன் ஆசை மனைவியின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடி, வாழ்நாள் முழுமைக்கும் அவருக்கு மறக்க முடியாத பிறந்தநாள் கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் மார்ட்டின் டர்னர் என்பவர். அவர் ஆசைப்பட்டது மாதிரியே அவரது மனைவிக்கு அன்றைய பிறந்தநாள் கொண்டாட்டம் வாழ்நாள் முழுமைக்கும் மறக்க முடியாத பிறந்தநாளாகவே அமைந்தது. 

வாழ்வின் மொத்த சந்தோஷத்தையும் ஒரே சமயத்தில் கொண்டாடித் தீர்த்து விட வேண்டும் என்கிற ஆசை பெரும்பாலான மனிதர்களுக்கு ஏற்படுவது உண்டு. அப்படி, தன் ஆசை மனைவியின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடி, வாழ்நாள் முழுமைக்கும் அவருக்கு மறக்க முடியாத பிறந்தநாள் கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் மார்ட்டின் டர்னர் என்பவர். அவர் ஆசைப்பட்டது மாதிரியே அவரது மனைவிக்கு அன்றைய பிறந்தநாள் கொண்டாட்டம் வாழ்நாள் முழுமைக்கும் மறக்க முடியாத பிறந்தநாளாகவே அமைந்தது. 44 வயதான ரிச்சர்ட், மனைவியின் பிறந்த நாளை நடுக்கடலில் கொண்டாட திட்டமிட்டார். மனைவியுடன், தனது திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக  இந்திய பெருங்கடலில் இருக்கும் ரீ – யூனியன் தீவுக்குச் சென்றார். ரீ-யூனியன் தீவில் பிறந்தநாள் ஏற்பாடுகளைச் செய்து விட்டு, ஹாயாக கடலில் நீச்சல் அடிக்கச் சென்றார். கணவர் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார் மனைவி. சிறிது நேரத்திற்கு பிறகு கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் கடலில் கணவரைக் காணவில்லை. பதற்றத்துடன் தேடியும், நீண்ட நேரமாக காத்திருந்தும் கணவர் வராததால் அவரது மனைவி போலீசில் இது குறித்து புகாரளித்தார். 

shark

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது கணவரை கடலில் இருந்த சுறா மீன்கள் சாப்பிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கடலில் இது குறித்து ஆய்வு நடத்திய போலீசார், உபகரணங்களின் உதவியுடன் அந்த பகுதிகளில் 4 சுறா  மீன்களைப் பிடித்தனர். அவற்றின் வயிற்றில் சில மனித உடல் பாகங்கள் இருந்துள்ளன. ஒரு சுறா மீனின் வயிற்றில் ரிச்சர்டின் திருமண மோதிரம் இருந்த கைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருமண மோதிரத்தை வைத்து, அந்த சுறா மீன் உணவாக உட்கொண்டது ரிச்சர்டைத் தான் என்பது நிரூபணமானது. மற்ற சுறாக்களின் வயிற்றில் இருந்த உடல் பாகங்களை டி.என்.ஏ பரிசோதனைக்கு உள்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மகிழ்ச்சியாக கொண்டாட தீவிற்கு சென்ற ரிச்சர்ட், சுறாக்களுக்கு இரையானது அவரது மனைவிக்கு பெரும் சோகத்தை தந்தது.